செம்மாரி Quotes

Rate this book
Clear rating
செம்மாரி செம்மாரி by Samura - சமுர
98 ratings, 3.93 average rating, 66 reviews
செம்மாரி Quotes Showing 1-9 of 9
“கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும்
உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு!
உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும்,
இருக்கவேண்டும், நீ விட்ட வடு!”
Samura, செம்மாரி
“சிரமுடி கருப்பாக இருந்தால்தான் இளமை;
கருவிழி கருப்பாக இருந்தால்தான் பார்வை;
கருப்பு மேகம், வந்தால்தான் வளமை;
இருட்டு, தினமும் வந்தால்தான் வாழ்க்கை!”
Samura, செம்மாரி
“வெள்ளை மனதுடன் இருப்பதே மேல்,
‘இல்லை’ என்ற மனசுக்காரன், இறப்பதே மேல்;
வெள்ளைத்தாளிலே, எழுத்தாளரின் கலை எழுத்து தொடங்கும்,
வெற்றுத்தாளிலே கையெழுத்திட்டவரின், தலை எழுத்து முடங்கும்!”
Samura, செம்மாரி
“இங்கு பெரியோன், சிறியோன் இல்லை,
இங்கு கல்லோன், இல்லோனே உண்டு;
தெரிந்ததை, பத்து பேருக்கு சொல்லிக்கொடு,
இருப்பதை, அற்ற பேருக்கு அள்ளிக்கொடு!”
Samura, செம்மாரி
“மோசமான சினத்தை ஆதரித்தால்,
அவமானச்சின்னமே, அவதரிக்கும்;
கனப்பொழுது, கோபத்தை கட்டுப்படுத்தினால்,
தினப்பொழுதும், வாழ்வில் துன்பமில்லை!”
Samura, செம்மாரி
“தனக்குப்பின் ஒருவன் தலை தூக்குவான் என,
தன் தலையைப்பற்றி அஞ்சாமல், முன்னின்று போராடுபவனே தலைவன்;
முதிர்ந்த தலைவன், உதிர்ந்து போகவும் தயங்கமாட்டான்,
முளைத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுபோக!”
Samura, செம்மாரி
“வேண்டும் என்று, இர���க்கும் அறியாதவனுக்கு, புரியவைப்பதை விட,
வேண்டுமென்றே இருக்கும் அறிந்தவனுக்கு, புரியவைப்பது கடினம்;
நமக்கு தெரிந்தவனிடம் சண்டைபோட்டு விளையாடுதைவிட,
நமக்கு தெரியாதவனிடம் விளையாட்டாய் சண்டையிடுவது ஆபத்து!”
Samura, செம்மாரி
“சாதித்தவனை, சாதி பாராமல் பாராட்டு;
நிறவேத்தியவனை, நிறம் பாராமல் பாராட்டு;
இணக்கமாக இருப்பவனை, இனம் பாராமல் பாராட்டு;
சமயத்தில் முடித்தவனை, சமயம் பாராமல் பாராட்டு!”
Samura, செம்மாரி
“தாவரத்திற்கும், உயிர் உண்டு,
தாவும் இனத்திற்கும், உணர்வு உண்டு;
தான் உண்டு, என இருப்பதை,
நாம் உண்டு வாழ, அழிக்காதே!”
Samura, செம்மாரி